கோவை:கோவையில் நேற்று, 1,189 பேர் கொரோனா குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 75 ஆயிரத்து 530 ஆக உயர்ந்தது. மூன்று பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை, 2,540 ஆக உயர்ந்துள்ளது.அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 1,189 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 57 ஆயிரத்து 64 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 15 ஆயிரத்து 926 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.