சென்னை--வல்லுார் அனல் மின் நிலையத்தில், 500 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் வல்லுாரில், மத்திய அரசின் என்.டி.பி.சி., எனப்படும் தேசிய அனல் மின் கழகம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, கூட்டு அனல் மின் நிலையம் அமைத்துள்ளது.அங்கு தலா 500 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு தினமும் 1,060 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வல்லுார் மின் நிலையத்தின் முதல் அலகில் பாய்லர் டியூப் பஞ்சர் காரணமாக, நேற்று முன்தினம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.