சங்கடஹர சதூர்த்தியையொட்டி, பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதி விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பவுர்ணமிக்கு அடுத்த நான்காவது நாள், சங்கடஹர சதுர்த்தியாக, பக்தர்களால், பின்பற்றப்படுகிறது. சங்கடங்கள் தீர, இந்நாளில், விரதமிருந்து, மா\லையில் விநாயகர் கோவிலில் நடக்கும், சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் பங்கேற்கின்றனர்.நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி, உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த, குபேர விநாயகரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.காந்திசவுக் வலம்புரி வெள்ளி விநாயகர் கோவிலில், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது.