கோவை:கோவையில் நேற்று, 1,383 பேர் கொரோனா குண மடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.நேற்று, 3,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 79 ஆயிரத்து 225 ஆக உயர்ந்தது. இருவர் இறந்தனர். பலி எண்ணிக்கை, 2,542 ஆக உயர்ந்துள்ளது.அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 1,383 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 58 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 18 ஆயிரத்து 236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.