போட்டி முடிவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ''போட்டிக்கு, 1,250 காளைகள் வந்திருந்தன. ஆனால், குறித்த நேரத்தில் 873 காளைகள் மட்டுமே போட்டியில் களம் இறங்க முடிந்தது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 400 வீரர்கள் களம் இறங்கினர். இதில் 21 காளைகளை அடக்கி சாதனை படைத்த வீரர் குருவித்துறை மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஆல்டோ கார் பரிசாக வழங்கப்படுகிறது,'' என்று அறிவித்தார்.
இரண்டாம் பரிசாக, 19 காளைகளை அடக்கிய மதுரையை சேர்ந்த பிரபா என்பவருக்கு புல்லட் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை 18 காளைகளை அடுக்கிய திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கார்த்திக் பெற்றார்.
பரிசளிப்பு விழாவில் கலெக்டர் சமீரன் மற்றும் அரசு அதிகாரிகள், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போட்டியை பார்வையிட பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், ஆளும் கட்சியினர், வி.ஐ.பி.,க்களின் கூட்டமே பெரும் கூட்டமாக இருந்தது.
சிறந்த காளைகள்
102 வீரர்கள் காயம்