தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை யொட்டி, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபி?ஷகம், பூஜை நடந்தது. பின், மூலவர் விநாயகருக்கு முத்தங்கி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்தனர். இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், தேர்நிலையம் செல்வகணபதி விநாயகர் கோவில், அப்பாவுநகர் கற்பக விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் அலங்காரங்கள் நடந்தன.