திருப்பூர்:திருப்பூர் - தாராபுரம் ரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கருப்பையா, 45; தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த, 13ம் தேதி வீட்டை பூட்டி விட்டு கொடைக்கானல் சென் றார். பின், நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, ஒரு லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.