கடலுார் : பள்ளி ஆசிரியையை திருமணம் செய்ய மறுத்த கல்லுாரி பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் பகுதியைச் சேர்ந்த 29 வயது தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த தனியார் கல்லுாரி பேராசிரியர் கார்த்திகேயன், 30; என்பவருக்கும் 2019ம் ஆண்டு, முக நுாலில் பழக்கம் ஏற்பட்டு, காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்தாண்டு செப்., 17ம் தேதி கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசிரியையிடம் தனிமையில் நெருங்கி பழகினார்.பின், திருமணம் செய்ய மறுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று வழக்குப் பதிந்து கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.