திருவெண்ணெய்நல்லுார் : அடையாளம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கூட்ரோடு பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு 60 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத மூதாட்டி மயங்கிக் கிடந்தார். போலீசார் அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.அரசூர் வி.ஏ.ஓ., ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் பேலீசார் வழக்குப் பதிந்து இறந்த மூதாட்டி யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.