சூலுார்:புதுக்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமணன், 30; மனைவி செல்சியா, 21. திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளாகின்றன. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. சூலுார் அடுத்த கரையாம்பாளையத்தில் தங்கி இருந்தனர்.நேற்று முன்தினம் செல்சியா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண்ணின் பெற்றோர், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, சூலுார் போலீசில் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.