அரியாங்குப்பம் ; தவளக்குப்பம் அருகே மயங்கி விழுந்த மீனவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் நாகலிங்கம், 35; மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்து வெளியில்சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.