புதுச்சேரி, : சாப்பாடு சரியில்லை என கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முதலியார்பேட்டை நைனார்மண்டபம் சுகாதார குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் ஏழுமலை,62. இவரது மனைவி விஜயா, 60.கடந்த 18ம் தேதி சமையல் சரியில்லை என ஏழுமலை, விஜயாவை திட்டினார். இதனால் விஜயா கோபித்துக்கொண்டு கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். 19ம் அதிகாலை 4.௦௦ மணியளவில் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.