ஓட்டேரி, : வாலிபரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.புளியந்தோப்பு, வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர், 25. கூடாரம் அமைக்கும் வேலை செய்பவர்.இவர், நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலையில்நடந்து சென்றபோது, மர்ம நபர்கள் இருவர் அவரை கத்தியால் தாக்கி தப்பினர்.இது குறித்த புகாரின் அடிப்படையில், ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.