செஞ்சி : வயிற்று வலியால் அவதிப்பட்ட சாலை பணியாளர் பூச்சி மருந்தை குடித்து இறந்தார்.செஞ்சி அடுத்த சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 55; இவர், செஞ்சி நெடுஞ்சாலைத் துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு அவர், கடந்த 21ம் தேதி இரவு பூச்சி மருந்தை குடித்தார்.ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று காலை இறந்தார்.புகாரின் பேரில் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.