ரிஷிவந்தியம்-காட்டு எடையார் கிராமத்தில் மகளைக் காணவில்லை என போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகள் சந்தியா, 24; கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லுாரியில் எம்.எஸ்சி., படித்து வருகிறார். இவரை கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.