விழுப்புரம்-வானுார் அருகே கோவில் திருவிழா கணக்கு கேட்ட தகராறில் 18 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வானுார் அருகே விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மனைவி சரளா, 50; இவர், அந்த கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கணக்கை கடந்த 19ம் தேதி கேட்டுள்ளார். இதனால், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், வானுார் போலீசார் கவிதா, சரளா உட்பட 18 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.