குன்றத்துார் : குன்றத்துாரை அடுத்த வடக்கு மலையம்பாக்கம், குமரன் நகரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார், 18. போரூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.டெக்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், நண்பர் முத்துவுடன் சேர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். இருவரும், 5- கண் மதகில் இறங்கி, குளித்தனர். அப்போது, நரேஷ்குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கினார். நண்பர் முத்து அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை.நேற்று காலை, நீண்ட நேரம் போராடி நரேஷ்குமாரின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.