நிலக்கோட்டை : சொக்குபிள்ளைபட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி 40. அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் 46. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. நாகராஜ், அவரது மகன்கள் சந்தோஷ், சந்துரு, உறவினர் ராஜபாண்டி ஆகியோர் வீட்டின் முன்பாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களை தங்கப்பாண்டி உறவினர்கள் நிவாஸ், சின்னச்சாமி, முனியாண்டி, கணேஷ், பாக்யராஜ், சதீஷ் உள்ளிட்ட 17 பேர் தாக்கினர். காயமடைந்த தங்கப்பாண்டி, சந்துரு, நாராஜ், சந்தோஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விளாம்பட்டி போலீசார் 20 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.