மறைமலை நகர் : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் மகன் முருகானந்தம், 36 . மறைமலைநகர் அடுத்த கிழக்கு பொத்தேரி வர்ஷா அவென்யூ பகுதியில், மைத்துனர் வீட்டில் தங்கி, அவருடன் இணைந்து பழச்சாறு கடை நடத்தி வந்தார். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகை கொண்டாட, அனைவரும் சொந்த ஊர் செல்ல, இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகில் உள்ள கடையின் குடோனில், நைலான் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.உறவினர்கள் தகவலின்பேரில், மறைமலை நகர் போலீசார் வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.