கரூர்: கரூரில் தொற்று பரவல் அதிகரித்து, புதிதாக நேற்று, 234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும், கரூரில் தொற்றுபரவல் அதிகரித்து வருகிறது. புதிதாக நேற்று, 234 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். குணமடைந்த, 176 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம், 27 ஆயிரத்து, 302 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 25 ஆயிரத்து, 484 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 1,448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.