செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மண் வளத்தை அதிகரிக்க தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.மகசூல் அதிகரிப்புவேளாண் துறை மூலம் நெல், பயறு, வேர்க்கடலை மற்றும் தென்னை பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்கள் உற்பத்திசெய்யப்பட்டு வருகின்றன.
அவற்றை பயிர்களுக்கு வழங்குவதால், பயிருக்கு தேவையான நுண்ணுாட்டங்கள் ஒருங்கே கிடைப்பதுடன், 20 முதல் 25 சதவீதம் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்களின் தேவை குறைக்கப்பட்டு, 15 முதல் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது.விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி நுண்ணுாட்ட உரங்களை பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.