காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள், கோவாவில் நடந்த தேசிய டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் பங்கேற்று, ஒரு தங்கம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றனர்.
கோவாவில் கடந்த வாரம் 36வது தேசிய அளவிலான டேக்வாண்டோ விளையாட்டு போட்டி நடந்தது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் பங்கேற்றனர்.மாஸ்டர் பாண்டியராஜன் தலைமையில் மாணவர்கள் கோவா சென்று விளையாடினர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், காஞ்சிபுரத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள், ஒரு தங்கம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றனர்.தர்னேஷ், 12, தங்கம் வென்றார்; கார்த்திகேயன், 13, வெள்ளி; காமேஷ், 15, வெண்கலம்; சித்தார்த், 11, வெண்கல பதக்கம் வென்றனர்.