திருப்பூர்:திருப்பூரில், 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் பகுதியில், 15 வயது சிறுமி, தாயாருடன் வசித்து வருகிறார். அருகே உள்ள அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுமி வீட்டு அருகே வசித்து வரும், இருவர் சிறுமியிடம் சில மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக, சிறுமியின் தாயார் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார்அளித்தார். இது தொடர்பாக, இருவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்தனர். சாய ஆலை உரிமையாளரான இளையராஜா, 38 என்பவரை கைது செய்தனர். தலை மறைவாக இருந்த பாபு, 47 என்பவரை தேடி வந்த நிலையில், அவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.