வத்திராயிருப்பு:'சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், தை பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக இன்று முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்' என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், மாதம்தோறும் சதுரகிரி வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். நேற்று முன்தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து, இன்று தை பிரதோஷம், ஜன., 31ல் தை அமாவாசை வழிபாட்டிற்காக, பிப்., 1 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.