வேலுார்:சோதனையான காலகட்டத்தில் உணவுத்தொழில் உள்ளதாக, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் மு. வெங்கடசுப்பு கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா குறைந்ததும், கடந்த மாதத்திலிருந்து ஓரளவு பாதிப்பு குறைந்தது. ஆனால் பழைய நிலையை எட்டுவதற்கும், இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார சீர்க்குலைவுகளில் இருந்து மீள்வதற்கும், மேலும் இரண்டு ஆண்டுகளாகும்.ஆனால் சமையல் எரிவாயு விலை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது. உணவு எண்ணெய் விகைகள் 25 சதவீதம், தொழிலாளர்கள் சம்பளம் 10 முதல் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் உணவுப்பண்டங்கள் உற்பத்தி செலவும் அதிகரித்து விட்டது. உணவுத் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டுமானால், வாடிக்கையாளர் நலம் காத்தல் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.அரசுக்கு உரிய நேரத்தில் வரியை செலுத்த வேண்டும். சோதனையான காலகட்டத்தில் ஓட்டல் தொழில் உள்ளது. இதனால் உணவுப் பண்டங்களின் உயர்வை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அனைத்து பிரச்சனைகளை ஆய்வு செய்து, முடிவுகளை எடுத்து ஓட்டல் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.