பழநி : பழநி மலைக்கோவில் நிர்வாகத்தில் செயல்படும் கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோவிலில், திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி, திருஞான சம்பந்தருக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பொன் கிரீடம் சூட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தேவாரப் பாடல்களைப் பாடி ஓதுவார்கள் வழிபட்டனர்.சிவனும், பார்வதியும் ரிஷப வாகனத்தில் வலம் வந்தனர். தொடர்ந்து, அமிர்த லிங்கம் குருக்கள், செல்வசுப்பிரமணியம் குருக்கள் தலைமையில், பொற் கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது.