மதுரை: மதுரையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நகருக்குள் மேலும் 3 பறக்கும் பாலங்கள் கட்டுவதற்கான நடவடிக்கையில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது.
தற்போது நத்தம் ரோட்டில் 7 கி.மீ., தொலைவுக்கு பறக்கும்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாநகராட்சியின் மேற்கு வாயில் பகுதியில் துவங்கும் மற்றொரு பாலம் கோரிப்பாளையம், ஏ.வி.பாலம் வழியாக வடக்குவெளிவீதி - கீழவெளிவீதி சந்திப்பு அண்ணாத்துரை சிலையில் முடிவடைகிறது.
ரூ.199.12 கோடி மதிப்பில் 3.01 கி.மீ., தொலைவுக்கு இப்பாலம் அமைய உள்ளது. இதில் செல்லுார் மற்றும் பீபிகுளத்திற்கு இருபிரிவுகள் அமையும். இதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்துள்ளன. நிலம் கையகப்படுத்தும் பணி பாக்கி உள்ளது.
இதேபோல சிம்மக்கல்லில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் வரை 2 கி.மீ., தொலைவுக்கு மற்றொரு பாலம் அமைய உள்ளது. இதில் வக்கீல் புதுத்தெருவில் ஒரு பிரிவு இறங்கும் வகையில் பாலம் அமைகிறது. மற்றொரு பாலம் நெல்பேட்டையில் துவங்கி கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி வழியாக அவனியாபுரம் வரை 4.800 கி.மீ., தொலைவுக்கு அமைகிறது.
இந்த 2 பாலங்கள் குறித்த கருத்து கேட்பு, சர்வே பணிகள் முடிந்துள்ளன. கட்டுமான பணிகள், திட்டமதிப்பீடு போன்றவை குறித்து பொறியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இப் பாலங்களின் கட்டுமான பணி 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.
இதுதொடர்பாக நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ''கோரிப்பாளையம் பால பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. விரைவில் ஒப்பந்தப்பணி துவங்க உள்ளது'' என்றார்.நகரில் எத்தனை பாலங்கள், ரோடு வசதிகள் அமைத்தாலும் ஆக்கிரமிப்புகள் குறையாதவரை நெரிசலுக்கு தீர்வு காண முடியாது என்பதே உண்மை. அதில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
ஆக்கிரமிப்பு செய்வோருக்கு மாற்று இடம் தரப்பு பட மாட்டாது என்று ஒரு அவசர சட்டத்தை அவசரமாக இயற்ற வேண்டும் ஆக்கிரமிப்பு அகற்றல் தொடர்பான ஆக்கிரமிப்பாளர்கள் வழக்குகள் நீதி மன்றங்களில் பதிவு செய்யப் படாது என்றும் அறிவிக்க வேண்டும்
DMK is going in correct direction. 40% commission BJP in both states and center is taking India backward. No development only 40% commission by BJP. BJP is the most corrupt party. TN BJP leaders even before coming to power are involved in scam, like annamalai temple collection, H Raja election fund misappropriation, L Murugan purchasing crores of worth land for 4 lacs, etc. DMK is anytime better than 40% commission BJP
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.