* அரச்சலுார் அருகே வினோபா நகர் உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 3,425 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 22.௪௦ ரூபாய் முதல், 26.௨௦ ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
* சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. மொத்தம், 492 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 61.௨௦ ரூபாய் முதல், 69.30 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 15 ஆயிரத்து, 968 கிலோ எடை நிலக்கடலை, 10 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
* மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 23 ஆயிரத்து, 494 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 21.௨௦ ரூபாய் முதல், 2௪ ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 2.௧௧ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 39 மூட்டைகள் வரத்தாகின. முதல் தரம் கிலோ, 81.௪௦ ரூபாய் முதல், 85 ரூபாய் வரை; இரண்டாம் தரம் கிலோ, 50.90 ரூபாய் முதல், 77.10 ரூபாய் வரை விலை போனது.
* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில் (கிலோவில்), மல்லிகை, 455 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 160, காக்கடா, 250, செண்டுமல்லி, 42, கோழிகொண்டை, 51, ஜாதிமுல்லை, 500, சம்பங்கி, 30, கனகாம்பரம், 800, அரளிபூ, 109, துளசி, 50, செவ்வந்தி, 100 ரூபாய்க்கும் ஏலம் போனது.