திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் உட்பட 29 கோவில்களில் அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சேவை கட்டண டிக்கெட்டுகள், 'டெபிட்' மற்றும் 'கிரெடிட் கார்டு' மூலம் பெறும் வசதி அறிமுகமாகி உள்ளது.
இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருத்தணி முருகன் கோவில் உட்பட மொத்தம், 29 கோவிலுக்கு அர்ச்சனை, அபிஷேகம் போன்ற டிக்கெட்டுகள் வழங்க, 46 கருவிகள் அந்தந்த கோவில் பொறுப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு உள்ளன.
அன்னதானம் வழங்கப்படும் ஆறு கோவில்களுக்கு மட்டும் கையடக்க கருவி மற்றும், கம்ப்யூட்டர் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.இந்த கருவியில், கார்டுகள் வாயிலாக டிக்கெட் பெறும் வசதியும் உள்ளது. ஒரு வாரத்திற்குள் கருவிகள் 'அப்டெட்' செய்யப்பட்டு, கார்டுகள் வாயிலாக டிக்கெட் பெறும் வசதி அமலாகும். இவ்வாறு அவர் கூறினார்.