காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் உயிர் இழந்த இடத்தில் அவருக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 31 ம் ஆண்டு நினைவு தினமான நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.அப்போது கே.எஸ்.அழகிரி கூறியதாவது-:ராஜிவ் கொலை செய்யப்பட்ட போது எங்கள் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது. தற்போது கொலையாளியின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வடிகிறது.இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் கதறுகிறோம்; கண்ணீர் விடுகிறோம். மனிதபிமானத்தோடு வாழ்வது தான் மனித தன்மை. பழிவாங்குவது என்பது மனித தன்மை அல்ல. மிருகங்களுக்கு கூட பழிவாங்குகிற குணம் கிடையாது. ஆனால், ஒரு சிலர் பழிவாங்கும் மனப்பான்மையோடு வாழ்கின்றனர்.
தமிழகம் எப்போதுமே நியாயத்திற்கு பெயர்பெற்ற நாடு. தன்னுடைய மகன் ஒரு கன்றின் மீது தேரை ஏற்றி கொன்றான் என்பதற்காக, மகனை தேரை ஏற்றி கொன்ற சோழ பரம்பரையை சேர்ந்தவர்கள் நாங்கள். நீதி வழங்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். குற்றம் செய்தவர்கள் தண்டனைஅனுபவிக்க வேண்டும் என சொல்கிறோம். குற்றவாளி குற்றவாளிதான். குற்றவாளி கடவுளாக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.இவ்வளவு பேசினாலும், ராஜிவ் கொலைக் குற்றவாளியை ஆரத் தழுவி, ஆனந்தக் கண்ணீர் வடித்த தி.மு.க.,வுடன் கூட்டுறவை முறித்துக் கொள்ள மனமில்லை என்பது போல், அது குறித்து எதுவும் பேசாமல் நகர்ந்தார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.