கூட்டத்தில், கலெக்டர் பேசுகையில், 'குழந்தை திருமணம் செய்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மட்டுமல்லாமல், திருமணத்தில் பங்கேற்பவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குழந்தை திருமணம் குறித்த தகவலை 1098 என்ற குழந்தைகள் உதவி எண் மற்றும் 181 என்ற மகளிர் உதவி எண் அல்லது மாவட்ட சமூக நலத்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ள கிராம ஊராட்சி தலைவர்கள், தங்களுடைய கிராமங்களில் குழந்தை திருமணம் நடக்கிறதா என்பதை தினமும் ஆய்வு செய்வதுடன், குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்' என்றார்.