கோபி : பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 31 லட்சம் ரூபாய்க்கு, கவுந்தப்பாடியில் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்தது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,440 ரூபாய் முதல், 2,450 ரூபாய் வரை விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,250 ரூபாய் முதல், 2,260 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 1,295 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 31.19 லட்சம் ரூபாய்க்கு, கொள்முதல் செய்ததாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.