ஊட்டி: நீலகிரி மாவட்டம், சென்ற முதல்வர் ஸ்டாலின் , ஊட்டி, பகல்கோடு மந்து கிராமத்திற்கு நேரில் சென்று, அப்பகுதி மக்களின் குடியிருப்புகளை பார்வையிட்டார். அக்கிராமத்தை சேர்ந்த தோடர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, கலாசார முறை கேட்டறிந்த அவர் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், பகல்கோடு மந்து பகுதியில் பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எம்.பி., நிதியில் இருந்து சமுதாய கூடம் கட்டிதரப்படும் என்றார். மேலும், எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், அரசு அனைத்து வித உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
சிறுமிகளுடன் கலந்துரையாடிய முதல்வர், அங்கு நடந்த நிகழ்ச்சியில், மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்.