உடுமலை:வரும் 25ம் தேதி நடக்கும், மாவட்ட சதுரங்க போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன், யாழி ஸ்போர்ட்ஸ் அகாடமி, குமரன் சதுரங்க அகாடமி சார்பில், தாராபுரம் ரோடு, ஏஞ்சல் இன்ஜி., கல்லுாரியில், மாவட்ட சதுரங்க போட்டி வரும் 25ம் தேதி நடத்தப்படுகிறது.இதில், ஏழு வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். 2003 ஜன., 1 முதல், 2015, ஜன., 1 வரை பிறந்தவர்கள் போட்டியில் பங்கேற்க தகுதியானவர்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 86376 48637 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.