கடலுார் : கடலுாரில் ஆதிபராசக்தி கோவிலின் பூட்டை உடைத்து திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் ராஜா மகன் மகேஷ், 27; இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் திவாகர், புகழேந்தி ஆகியோருடன் நேற்று அதிகாலை கோண்டூரில் இருந்து சாவடிக்கு நடந்து சென்றார்.சாவடி பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது, ஆதிபராசக்தி கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை மர்ம நபர் ஒருவர் இரும்பு ராடால் உடைத்தார்.இதனை கண்டு அவர்கள் கூச்சலிட்டதும் மர்ம நபர் அருகில் இருந்த மாடி வீட்டின் மீது ஏறி கீழே குதித்து தப்ப முயன்றார். கீழே விழுந்ததில் அவருக்கு காலில் சிராய்ப்பு ஏற்பட்டது. இவரை மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில் கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், திருச்சி, திருவரம்பூரைச் சேர்ந்த நிர்மல் குமார் (எ) நிர்மல் ராஜ்,31; என்பதும், கோவிலில் திருட முயன்றதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது, திருச்சி, திண்டுக்கல் போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.