-சிலம்பம், நுன் ஜாக்கினை, 1.20 மணி நேரம் சுற்றி, நோபல் உலக சாதனை புத்தகத்தில், ஈரோடு மாணவியர் இடம் பிடித்தனர்.
ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகம், புத்தாஸ் சிலம்பாட்ட டிரஸ்ட் இணைந்து, ஈரோட்டில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியது. இதில், 10வயது பிரிவில் திக்ஷா சக்தி, ஏழு வயது பிரிவில் சிவிக்ஷா சக்தி ஆகியோர் ஒற்றைக்கம்பு சிலம்பமும், நுன் ஜாக்கும் இடைவிடாது சுற்றினர். மாணவி சிவிக்ஷா சக்தி, 1 மணி நேரம் 5 நிமிடம் 6 விநாடி; மாணவி திக்ஷா சக்தி, 1 மணி நேரம் 20 நிமிடம் 3 விநாடி சுழற்றி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
நோபல் உலக சாதனை முதன்மை அலுவலர், மாநில நடுவர் துரைராஜ் ஆகியோர், மாணவிகளை பாராட்டி சான்றிதழ், பதக்கம் வழங்கினர். சிலம்பாட்ட கழக தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். அக்னி ஸ்டீல் இயக்குனர்கள் சின்னச்சாமி, தங்கவேல், ராஜாமணி சின்னச்சாமி கலந்து கொண்டனர்.