திருச்சி: மணப்பாறை நகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்ததால் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வில் 11 பேரும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் 11 பேரும் வெற்றி பெற்றனர். சுயேச்சையாக போட்டியிட்ட ஐந்து பேர் வெற்றி பெற்றனர். அனைத்து சுயேச்சை கவுன்சிலர்களும் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த போதிலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சுதா என்பவர் நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றினார். அதன் பின் இரண்டு முறை நடைபெற்ற துணைத் தலைவருக்கான தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் சுயேச்சைகளும் பங்கேற்காததால் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் நகராட்சி கவுன்சில் கூட்டமும் நடைபெறாததால் அ.தி.மு.க.வை சேர்ந்த நகராட்சித் தலைவர் சுதா சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.நகராட்சி கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று நகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புபடி நாளை மதியம் நகராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 1வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்லம்மாள் என்ற கவுன்சிலரை அ.தி.மு.க.வினர் கடத்திச் சென்று விட்டதாக நேற்று தகவல் பரவியது. இதையடுத்து மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட தி.மு.க.வினர் கவுன்சிலரை கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் வலியுறுத்தினர்.அதே சமயம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட 10 பேர் தாயை கடத்திச் சென்றதாக கவுன்சிலர் செல்லம்மாளின் மகன் பிரபு மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். புகார்படி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகர் நகர செயலர் ராமமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே 'என்னை யாரும் கடத்தவில்லை. கட்சி கூட்டத்திற்கு வந்தேன்; கூட்டம் முடிந்தவுடன் நாளை வந்து விடுவேன். எந்த பிரச்னையும் இல்லை' என்று செல்லம்மாள் பேசிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.