ஈரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் தீனதயாளன், 30, கூலி தொழிலாளி. ஈரோட்டில் பாத்திர கடையில் வேலை பார்த்த, ௨௯ வயது பெண்ணுடன் பழகினார். திருமணமான அவரின் கணவர் இறந்து விட்டார்.
அவருக்கு எட்டு வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் அந்தப்பெண்ணை, 2016ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த, 2020 அக்.,22ல் வீட்டில் தனியாக இருந்த, பெண்ணின் எட்டு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதையறிந்த அவர் சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், தீனதயாளனை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக, ஐந்து ஆண்டு சிறை தண்டனை, ௨,௦௦௦ ரூபாய் அபராதம்; கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி, ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டார். தீர்ப்பை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் தீனதயாளன் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகை, ஒரு மாதத்துக்குள் வழங்க
அரசுக்கு பரிந்துரைத்தார்.