மாயனுார் கதவணைக்கு, வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் விநாடிக்கு, 2,604 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி விநாடிக்கு, 1,587 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங் களின் குடிநீர் தேவைக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க் கால்களிலும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி விநாடிக்கு, 294 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆறு மற்றும் புதிய பானச வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்படவில்லை. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 60.11 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 35.30 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 8.52 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.