பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அடுத்த, வீரபாண்டியில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம், 15 நாட்கள் திருவிழா நடக்கும்.நேற்று, முதல் நாள் நிகழ்வில், மாரியம்மனுக்கு 12 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், பூச்சாட்டு நடந்தது.வரும் ஜூன், 8ம் தேதி பண்டிகை நடக்கிறது.
இதேபோல, கூடலுார் கவுண்டம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது.தொடர்ந்து, 15 நாட்கள் அக்னிச்சட்டியுடன் கம்பம் சுற்றி ஆடுதல் நடக்கிறது. நாயக்கன்பாளையம், புதுப்புதுார் கிராமங்களில் இருந்து நகை சீர் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜூன், 5ல் மகா மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், 7ம் தேதி மாவிளக்கு ஊர்வலமும், எட்டாம் தேதி எருது பிடித்தல் நிகழ்ச்சியும், 9ம் தேதி மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.