இதுகுறித்து கறிவேப்பிலை வியாபாரிகள் கூறியதாவது: பொதுவாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, கறிவேப்பிலையின் விலை உயர்ந்து காணப்படும்.இந்த மாதங்களில் திருமணம் பல்வேறு விசேஷங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி விடுதிகளுக்கு, கறிவேப்பிலையின் தேவை அதிகரிக்கும். அதனால் இந்த மாதங்களில் விலை உயர்வாக இருக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லுாரி விடுதிகள் அவ்வளவாக செயல்படாது. திருமண முகூர்த்தங்களும் குறைவாக இருக்கும். இந்தக்கால கட்டத்தில், கறிவேப்பிலை விலை வீழ்ச்சியடையும்.கேரளாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், கறிவேப்பிலையில் தேவை அங்கு குறைந்துள்ளது.
மேலும், இங்கு நல்ல மழை காரணமாக, விளைச்சல் அதிகரித்துள்ளது.முதல்தரமான கறிவேப்பிலை, கிலோ 10 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 5 ரூபாய்க்கும் விலைபோகிறது. இந்த விலை, கட்டுபடியாகாது. சில விவசாயிகள் இதனால் கடன் வாங்கும் நிலையில் உள்ளனர்.வரும் ஜூன், ஜூலை மாதங்களில் தொடர்ச்சியாக திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லுாரி விடுதிகள் திறந்து, வழக்கம் போல் இயங்கும். இதனால் கறிவேப்பிலையின் தேவை அதிகரிக்கும் என்பதால், விலை உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கறிவேப்பிலை வியாபாரிகள் தெரிவித்தனர்.