திருக்கோவிலுார்:அரகண்டநல்லுார் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் இறந்தார்.
அரகண்டநல்லுார் அடுத்த டி.தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் சுரேந்தர், 12; தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த 18ம் தேதி காலை வீட்டின் மொட்டை மாடியில் விளையாடினார்.
அப்போது, வீட்டின் அருகே சென்ற தாழ்வழுத்த மின் கம்பி மீது கை பட்டு மின்சாரம் தாக்கி படுாயமடைந்தார்.உடன், சென்னை கே.எம்.சி., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு இறந்தார். புகாரின்பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.