திருமலை நாயக்கர் மகாலில் மாவட்ட தொல்லியல் துறை அலுவலகம் இயங்குகிறது. கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், சுவாமி சிலைகள், ஆயுதங்கள் என பல பழங்கால பொருட்கள் நிரம்பிய அரசு அருங்காட்சியகம் உள்ளது. மத்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கான அலுவலகம் கலை நயமிக்க பழங்கால கட்டடத்தில் அமைப்பது தான் வழக்கம். அதனால் மகாலில் அலுவலகம் அமைக்க இடம் கேட்கப்பட்டது.
அங்கு இடம் இல்லாததால் அருகேயுள்ள பிரிட்டிஷ் கால பழங்கால கட்டடத்தை தேர்வு செய்தனர். அங்கு பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படுவதால் அதுவும் கிடைக்கவில்லை. ஒத்தக்கடையில் ஒருங்கிணைந்த பத்திர அலுவலகம் கட்டப்பட்டும் மகால் பத்திர அலுவலகம் அங்கு மாற்றப்படவில்லை. கட்டடத்திற்காக 8 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். அந்த பிரிட்டிஷ் கட்டடம் சிதிலமடைந்து பெருமைகளை இழந்து வருவதால் அதை காலி செய்து மத்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும். இங்கு அலுவலகம் அமைந்தால் மதுரைக்கு கூடுதல் நிதி கிடைக்கும். அதன்மூலம் மதுரையை சுற்றியுள்ள தொல்லியல் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு அதை புனரமைக்க, பாதுகாக்க முடியும்.மதுரை, மே 27 - -
மதுரையில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு அலுவலகம் அமைக்க வரலாற்று பெருமையுள்ள திருமலை நாயக்கர் மகால் அருகேயுள்ள பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும் பிரிட்டிஷ் கால கட்டடத்திற்காக 8 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மதுரையின் முக்கிய சுற்றுலா பகுதியான மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு அருகில் அமைந்துள்ள பந்தடி முதல் தெருவில் உள்ள பெரிய குப்பை கிடங்கை அகற்ற மறுக்கும் மாநகராட்சி, மஹாலை சுற்றியுள்ள நல்ல சுகாதாரமான குடியிருப்பு பகுதியில் லாரி புக்கிங் கிடடங்கிகளுக்கு அனுமதி அளித்து சுகாதாரத்தை முழுவதுமாக கெடுத்து, இந்த பகுதி முழுவதையும் சிறுநீரகம் கழிக்கும் பொது கழிப்பிடமாக மாற்றி ,இங்கு வசிக்கும் பல குடியிருப்புக்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் அளவிற்கு மதுரை மாநகராட்சி இந்த பகுதி மக்களுக்கு எதிராக மிகவும் கொடூரமான நடந்து கொண்டு வருகிறது ஒரு அருமையான சுற்றுலா தளமும் அதை சுற்றி குடியிருப்பு பகுதி மற்றும் ஒரு பெரிய ஜானகிராம் பார்க் அமைக்கப் பட்டது. பந்தடி முதல் தெருவில் வீடு வீடாக குப்பைகளை வாங்குவதில்லை .குப்பைகளை பிரிப்பதில்லை. பந்தடி முதல் தெருவில் ஒரு மாநகராட்சி பள்ளியும் மருத்துவமனைகளும் குடியிருப்புகளும் உள்ளன. நடுவில் ஒரு பீடி சிகிரெட் கடைக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஏனெனில், இங்கு கூடும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இந்த கடை தேவைபடுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்து கண்டுகளிக்கும் ஒரு அருமையான அழகான சுற்றுலா தளத்தை இவர்கள் கையாளும் விதம் கொடூரமானது. தயவு செய்து பந்தடி முதல் தெருவில் அமைந்துள்ள குப்பை கிட்டங்கிகளை அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லுங்கள். இந்த தெருவிலும் மஹாலை சுற்றியுள்ள லாரி புக்கிங் கிடங்கிகளையும் ரிங் ரோடு, அவனியாபுரம், சிந்தாமணி ரயில்வே கேட் டிற்கு அப்பால் உள்ள பகுதி களுக்கு கொண்டு செல்லலாம் . மஹாலை சுற்றி எப்போதும் லாரிகள் நிற்கும் இடமாக மாறி வருகின்றன. இதனால் மாநகராட்சிக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கூட மாநகராட்சி அதிகாரிகள் தெரிந்துகொள்வதில்லை. இந்த இடத்தில அதாவது பந்தடி முதல் தெரு மற்றும் மஹால் சுற்று பகுதிகளில் நம் நாட்டு தமிழ் நாட்டுபாரம்பரியத்து தொடர்புடைய பூம்புகார் மாதிரி எம்போரியம், பட்டு சேலைகள், சுங்கிடி சேலைகள், மதுரை பாரம்பரிய சிற்பங்கள் கலை பொருட்களின் விற்பனை நிலையங்கள் இருக்க வேண்டும். இதனால் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும் சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும் .அந்த மாதிரி விற்பனை நிலையங்கள் கழிப்பறையுடன் கூடியதாக இருக்க வேண்டும் .மஹால் அருகில் மத்திய அரசின் தொல்பொருள் கலை மற்றும் பண்பாட்டு அலுவலகம் இருப்பது பல விதங்கலில் நன்மை பயக்கும் .
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.