நெல் சேகரிப்பது முதல் அரிசியினை ஒப்படைப்பது வரை, ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகளுக்கு, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் சேகரிப்பது முதல், கழக கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான, விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில், கழக அரவை முகவர்களை (முழு நேர மற்றும் பகுதி நேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.
எனவே, இதில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள், தங்களது விருப்ப கடிதத்தினை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல்- 637 003. அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.