கீழ்பவானி வாய்க்காலில், 720 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்துக்கு, ஒரு தரப்பு விவ
சாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர் மாவட்டத்திலும், போராட்டம் நடக்கிறது.
இந்நிலையில் வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் காங்கேயம் அருகே, நத்தக்காடையூரில் நேற்று நடந்தது.
போராட்டத்துக்கு ஆதரவாக நத்தகாடையூர், முள்ளிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
போராட்டத்துக்கு நத்தக்காடையூர் பஞ்., தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, திருப்பூர் எம்.பி., சுப்பராயன், பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், கீழ்
பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி, காங்கேயம் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நடராஜ், கொ.ம.தே.க., மாவட்ட தலைவர் கங்கா சக்திவேல், பல்வேறு அமைப்பினர், விவசாயிகள், பெண்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும், கான்கிரீட் திட்டம் வேண்டாம் என எழுதிய கடிதத்தை, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி
வத்தனர்.