மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் எந்தெந்த காலகட்டத்தில் எத்தனை பேர் தினக்கூலி பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர், யார், யார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர் போன்ற விபரங்களை பல்கலை தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை அருகே மணப்பட்டி சேகர் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலையில் 1991 ல் தினக்கூலி அடிப்படையில் தோட்ட பராமரிப்பு பணியில் சேர்ந்தேன். 2010 ல் பணி நீக்கம் செய்யப்பட்டேன். இதை எதிர்த்து மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். பணியில் அனுமதித்து ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க அந்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2011ல் பணியில் அனுமதிக்கப்பட்டேன். தினக்கூலியாக நுாலக பணியில் சேர்ந்தேன். 30 ஆண்டுகள் பணி செய்தும் பணியை வரன்முறைப்படுத்தவில்லை. என்னுடன் பணிபுரிந்த சிலர் நிரந்தரம் செய்யப்பட்டனர். பல்கலை தரப்பில் மே 10ல் என்னிடம், பணி நீக்கம் செய்யபட்டதாக வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது.
பணி நீக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சேகர் குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். பல்கலை தரப்பு: 136 பேர் தினக்கூலிகளாக குறிப்பிட்ட கால வரம்பு அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல்கலையின் நிதிநிலையை கருத்தில் கொண்டு உயர்கல்வித்துறை, நிதித்துறை செயலாளர்களின் ஆலோசனையின்படி பணி நீட்டிப்பு செய்யப்படவில்லை. மனுதாரர் தற்போது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தது.
நீதிபதி: பல்கலையில் எந்தெந்த கால கட்டத்தில், எத்தனை பேர் தினக்கூலி பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர், அவர்கள் எத்தகைய பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், நியமனத்திற்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளதா, யார், யார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர் போன்ற விபரங்களை துணைவேந்தர், பதிவாளர் 3 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மனுதாரரை பணியிலிருந்து விடுவிக்காதபட்சத்தில் இந்நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்றார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.