துாத்துக்குடி : துாத்துக்குடியில், கோர்ட் முன் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரை சேர்ந்தவர் தமிழழகன் 56. இவர் மகன் காசிராஜன் 30; லாரி டிரைவர்; இவரது மனைவி மகாலட்சுமி.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் மகாலட்சுமி ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்ததற்கு தந்தை தமிழழகன் தான் காரணம் என காசிராஜன் கூறிவந்தார்.
இது தொடர்பான குடும்ப வழக்கு துாத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்தது. நேற்று பகலில் தந்தையும், மகனும், துாத்துக்குடி கோர்ட்டில் ஆஜராக வந்திருந்தனர்.தந்தை தமிழழகனை கொலை செய்வதற்காக காசிராஜன் கையில் அரிவாளுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். தமிழழகன் தன் பாதுகாப்பிற்காக தம்பி கடல் ராஜா 48, உறவினர் காசிதுரை 21, ஆகியோருடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். கோர்ட்டில் ஆஜராகி விட்டு காரில் ஏற முயன்ற தந்தை உட்பட மூவரையும் காசிராஜன் அரிவாளால் வெட்டினார்; மூவரும் காயமடைந்தனர்.பின், காசிராஜனிடம் இருந்து அரிவாளை பறித்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சையில் உள்ளனர். தமிழழகன் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.