சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் தொடர்பு
கொண்ட மர்ம நபர், 'தாம்பரம், சேலம் ரயில்வே ஸ்டேஷன்களை வெடிகுண்டு
வைத்து தகர்க்கப்போகிறேன்' எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.
இதுகுறித்து ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு
தகவல் தெரிவித்து சோதனை நடத்தப்பட்டது.
அத்துடன் சென்னை, சேலம்
ரயில்வே போலீசார் விசாரித்ததில், செங்கல்பட்டு அருகே, சோலையூரை
சேர்ந்த வினோத்குமார், 35, மிரட்டல் விடுத்தது தெரிந்தது. நேற்று காலை,
சென்னை, கோட்டையூரில் இருந்த அவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில், மனைவியிடம் சண்டை போடும்போதெல்லாம்,
குடிபோதையில் மிரட்டல் விடுத்து வந்தது
தெரிந்தது.
ஏற்கனவே,
முன்னாள் முதல்வர் பழனிசாமியின் வீட்டுக்கு, இருமுறை வெடிகுண்டு
மிரட்டல் விடுத்ததையும் ஒப்புக்கொண்டார். அதேபோல் தற்போதும்
மிரட்டல் விடுத்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது
செய்தனர்.