மதுரை:மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற தொழிலாளி தற்கொலை செய்ததற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை பீபி குளம் இந்திராநகர் ரங்கம்மாள் தாக்கல் செய்த மனு:எனக்கு ஒரு மகன், 2 பெண் குழந்தைகள். மகன் ஈஸ்வரன் தச்சுத் தொழிலாளி. அவரை ஒரு பொய் வழக்கு தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரித்தனர். போலீசாரின் சித்ரவதையால் ஜன.,19 ல் அவுட்போஸ்ட் அருகே தீக்குளித்து தற்கொலை செய்தார். இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகனின் மரணத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி தமிழக உள்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரங்கம்மாள் குறிப்பிட்டார்.நீதிபதி வி.சிவஞானம் உள்துறை செயலர், டி.ஜி.பி., தல்லாகுளம் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜூலை 26 க்கு ஒத்தி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.