கீழக்கரை : பொதுமக்கள் நலன் கருதி கவுன்சிலர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமாக விவாதித்தனர்.
கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணை தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கமிஷனர் செல்வராஜ் வரவேற்றார். கோரிக்கையை அதிகாரிகள் செயல்படுத்த முன் வருவதில்லை என அனைத்து கவுன்சிலர்களும் குரல் எழுப்பினர். பின் நடந்த விவாதம்:
துணை தலைவர் ஹமீதுசுல்தான்: நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து விட்டு அதன் கட்டுமான பொருட்களை போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலேயே கொட்டுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. நகராட்சி கமிஷனர் சம்பந்தப்பட்ட வார்டுகளுக்கு செல்லும் போது கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்பதில்லை.
தலைவர் செஹானஸ் ஆபிதா: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கட்டுமானப்பொருட்களை வைத்திருப்போர் மீது நோட்டீஸ் அனுப்பி உரியமுறையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கவுன்சிலர் சூரியகலா: பஸ் ஸ்டாண்ட் பகுதியை ஒட்டி உள்ள நகராட்சிக்கு சொந்தமான மீன் கடைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டவும், புதிய பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணிகளை செய்யவும், பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் முகம்மது ஹாஜாசுஐபு: அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நம்ம டாய்லெட் பயன்பாடு இன்றி வீணாக வைக்கப்பட்டுள்ளது.
அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. அவற்றை உரிய முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என் வார்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் முகம்மது காசிம் மரைக்கார்: பொதுமக்களுக்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் பல இடங்களில் அனுமதி இன்றி வேகத்தடை அமைத்துள்ளனர். அவற்றினை முறைப்படுத்த வேண்டும்.கவுன்சிலர் ஜெயலட்சுமி: தட்டான் தோப்பு தெருவில் மேடான பகுதிகளுக்கு காவிரி குடிநீர் பல மாதங்களாக வழங்கப்படவில்லை.கமிஷனர் செல்வராஜ்: வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.